அரசாங்கத்தை அலற விட்டோம் நாங்கள்... விஜய்க்கு வந்த வம்பு !
டிராபிக் ராமசாமி பட விநியோக பிரச்சனையில் 21 லட்சங்கள் மோசடி செய்து விட்டதாக, நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து சினிமா தயாரிப்பாளரான மணிமாறன் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
குறிப்பிட்ட புகாரில் அவர் ஆளும் கட்சி குறித்து பேசிய சர்ச்சையான விஷயங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிராபிக் ராமசாமி படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கொடுப்பதாக கூறி 21 லட்சம் வாங்கி விட்டு,
கடைசியில் தானே வெளியிடும் முடிவுக்கு எஸ்.ஏ சந்திரசேகர் சென்று விட்ட நிலையில், மணிமாறன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார்.
அதற்கு சந்திரசேகரோ, ‘பணத்தை எல்லாம் திருப்பி கொடுக்க முடியாது. நீ ஜாக்கிரதையாக இருந்து கொள். நாங்கள் அரசாங்கத்தையே அலற விடுபவர்கள்’ என கூறி மிரட்டியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே பிகில் இசைவெளியீட்டு விழாவில் அரசியல் விமர்சனம் செய்தமைக்காக நடிகர் விஜயை நாலாபக்கமும் தாக்கி வருகிறது ஆளும் கட்சி.
இப்படி இருக்க எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவதை போல எஸ்.ஏ சந்திரசேகர் பேச்சு அமைந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
No comments