எனக்கு எண்டே கிடையாது.. ஹாலிவுட் செல்லும் வைகை புயல் !
தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் பிரபலங்களில் வைகைப்புயல் வடிவேலுவும் ஒருவர்.
அரசியல் பிரச்சார சர்ச்சைகளுக்கு பின் படவாய்ப்புகளை இழந்து, பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தாலும், இன்று வரை தொலைக்காட்சிகள் சமூக வலைத்தளங்கள் என மக்களை சிரிக்க வைத்து கொண்டே இருக்கிறார்.
‘காண்டிராக்டர் நேசமணி’ உலக ட்ரெண்ட் ஆன பின்பு, திரைத்துறையில் தான் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து முதன் முறையாக ரசிகர்களுக்காக மனம் திறந்திருக்கிறார்.
இது குறித்து பிரபல யூட்யூப் பக்கமான ‘பிஹைண்ட் வுட்ஸ்’க்கு அளித்த பேட்டியில், ‘நான் ஒரு நகைச்சுவை கலைஞன், ஆக்சன் ஹீரோ அல்ல. நான் சொல்வதை மட்டும் நீ நடி, என்பது நகைச்சுவைக்கு செட் ஆகாது.
நான் இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும், இயக்குனர் சொன்ன காட்சியுடன் நானே சில வசனங்கள், உடல் அசைவுகளை சேர்த்து நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறேன்.
பெரிய பெரிய இயக்குனர்களும், நான் காட்சிகளில் மாற்றம் சொன்னால் தயங்காது என் கருத்தை கேட்பார்கள். அது போல தான் ’24ம் புலிகேசி’ படத்திலும் சில மாற்றங்களை சொன்னேன்.
இயக்குனர் சிம்பு தேவனும் முதலில் சம்மதித்து விட்டு, தயாரிப்பாளர் சங்கர் வற்புறுத்தலின் பேரில் இப்போது மறுக்கிறார்.
மேலும் 23ம் புலிகேசி படத்தில் வேலை செய்த, மேக்கப் கலைஞர்கள், சண்டை பயிற்சியாளர் என கமிஷன் தர மறுத்ததால் நீக்கி விட்டனர். இதனாலேயே அந்த படத்தில் நான் நடிக்க மறுத்தேன்.
இப்பொழுது தமிழ் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் இருக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி சதி செய்பவர்களுக் கெல்லாம் என் ரசிகர்கள், நேசமணி ட்ரெண்ட் வழியாக அதிர்ச்சி கொடுத்து விட்டனர்.
இப்பொழுது எனக்கு ஹாலிவுட் படவாய்ப்புகள் தேடி வருகிறது. நெட்ப்ளிக்ஸ் தளத்திற் காகவும் நடிக்க இருக்கேன்’ என தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.
No comments