விக்னேஷ் இல்லாமல் தனியாக வந்த நயன்தாரா - ஏன் கோபமோ?
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
எந்த விழாவுக்கும் வராத நயன்தாரா இந்த விழாவுக்கு வந்தது அதிசயமாக பார்க்கப் பட்டது.
நயன்தாரா புடவையில் சிம்பிளாகவும், அழகாகவும் வந்திருந்தார். அவருக்கு இரண்டு விருதுகள் வழங்கப் பட்டது.
விக்கி எங்கே?
விஸ்வாசம் மற்றும் பிகில் படங்களுக் காக ஃபேவரைட் நடிகை விருதும், இந்திய சினிமாவில் பெண்களுக்கு முன் மாதிரியாக இருப்பதால் ஸ்ரீதேவி விருதும் நயன்தாரா வுக்கு வழங்கப் பட்டது.
நயன்தாரா எங்கு சென்றாலும் காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்வார். ஆனால் விருது விழாவுக்கு அவர் தனியாக வந்திருந்தார்.
இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே ஏதாவது பிரச்சனையோ என்கிற பேச்சு கிளம்பி யுள்ளது.
பிரச்சனையா?
மேடைக்கு வந்த நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் பற்றி மறைமுகமாக கேட்டதற்கு அவர் அதை கண்டு கொள்ள வில்லை. அடிக்கடி கோவில் களுக்கு செல்வது குறித்து கேட்டதற்கு மன நிம்மதிக்காக செல்வதாக தெரிவித்தார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காதது குறித்து தான் அனைவரும் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.
மேலும் நயன்தாரா விருது பெற்றது குறித்து விக்கி சமூக வலை தளங்களில் போஸ்ட் போடாததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோபம்
புத்தாண்டில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து நயன்தாரா விடம் அசிங்கப் பட்டது போன்று மறைமுக வீடியோ ஒன்றை வெளி யிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
ஒரு வேளை அந்த கோபம் இன்னும் தீரவில்லை போன்று. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை.
இந்நிலையில் நயன் விருது விழாவுக்கு தனியாக வந்தது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
No comments