EThanthi - காவலர்களுக்கு தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி !

Flash News

காவலர்களுக்கு தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி !

இன்றளவும் சினிமாத் துறையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் நிலைத்து வருபவர் ரஜினிகாந்த். 
தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி
உங்கள் ரஜனி -ஆம். ரஜனிதான் - என்ற இடத்தி லிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயரை ஏற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு மக்கள் அபிமானத்தை தாறுமாறாக சினிமாவில் சம்பாதித்து வைத்திருந்தார் ரஜினி.

ரஜினியின் அரசியல் கண்ணா மூச்சிகளுக்கு இடையில், தர்பார் திரைப்படம் வெற்றிகரமாக வெளிவந்து திரையரங்கு களில் ஓடிக்கொண்டிருக் கிறது.

இதில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினி. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் துறையின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில்

சலுகை விலை டிக்கெட்டில் காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் 'தர்பார்' திரைப்படம் பார்க்க மாவட்ட எஸ்.பி.ரோகித் நாதன் சிறப்பு ஏற்பாடு செய்தார்.

சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட காவல் நிலையம் மற்றும்
தர்பார் படம்
சிவகங்கை ஆயுதப் படையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போலீஸார் தங்களது குடும்பத்துடன் மானா மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை 10 மணிக்கு 'தர்பார்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, “பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளோம்.

அதற்கு முன்னதாக குடும்பத்துடன் திரைப்படம் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சி யாக உள்ளது.

இந்தத் திரைப்படம் போலீஸ் அதிகாரி பெருமைப் படுத்தும் விதமாக உள்ளது. திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்த எஸ்பிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.
காவலர்களுக்கு தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி ! காவலர்களுக்கு தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி ! Reviewed by EThanthi.in on January 15, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close