தளபதி 64 படக்குழு மீது எழுந்த புகார் பரபரப்பு !
பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
டெல்லியில் படப்பிடிப்பை நடத்தி விட்டு தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் முகாமிட்டுள்ளது படக்குழு.
முன்னதாக சென்னையில் உள்ள பார்வையற்ற குழந்தை களுக்கான பள்ளியில் படப்பிடிப்பு நடத்தப் பட்டுள்ளது.
அப்பொழுது பள்ளி வளாகத்தில் படக்குழு புகைப் பிடித்ததை கண்டித்து அவர்கள் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.
அப்பொழுது பள்ளி வளாகத்தில் படக்குழு புகைப் பிடித்ததை கண்டித்து அவர்கள் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பள்ளி வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மீதும் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் படக்குழு புகைப்பிடித்த போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி யுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்தாலே யார், யார் தம்மடித்தார்கள் என்பது தெரிகிறது.
விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்சனை வரும் நிலையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்சனை வரும் நிலையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
படக்குழு புகைப் பிடிக்கும் புகைப்படத்தை பார்த்தவர்கள் ஏம்பா, அந்த குழந்தைகள் பள்ளியில் கூடவா தம்மடிப்பீங்க, ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்று விளாசி யுள்ளனர்.
ஷிவமோகாவில் விஜய் இருப்பது தெரிந்து ரசிகர்கள் அங்கு கூடுகிறார்கள். நேற்று விஜய்க்கு ராட்சத மாலை அணிவித்து அசத்தினார்கள்.
தளபதி 64 படத்தில் மாளவிகா மோகனன், நாசர், கவுரி கிஷன், சாந்தனு, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, ஸ்ரீமன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments