EThanthi - கட்டுக்கதை சொல்லி கமல்ஹாசனை நம்ப வைத்த நடிகை !

Flash News

கட்டுக்கதை சொல்லி கமல்ஹாசனை நம்ப வைத்த நடிகை !

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களை விட விறு விறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பது தான். கடந்த வாரம் பிக் பாஸ் வீடா? இல்லை இது சண்டைக் காடா? என்கிற அளவு பிரச்சினைகள் மேலோங்கி இருந்தது.
கமல்ஹாசனை நம்ப வைத்த நடிகை

வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர் நோக்கி பலரும் காத்திருந்தனர்.

முதலாவது விசாரணை யாக சேரன், லாஸ்லியா இடையே ஏற்பட்ட பிரிவு பற்றிப் பேசினார்.

கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க 

அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்றார். 

மேலும் தான் அவரிடம் அதிக அளவு அன்பினை எதிர் பார்ப்பதனால் மட்டுமே இவ்வளவு கஷ்டமாக உள்ளது எனவும், இல்லையேல் நான் வருத்தப் பட்டிருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

அவர் பேசினால் தான் காதில் தேன் வழியும்படி இருக்குமே, அதனாலோ என்னவோ அது சரி எனவே ஏற்றுக் கொள்ளப் பட்டது, 

ஆனால் பார்வை யாளர்கள் பலரும் கவினை நாமினேட் செய்த பிறகிலிருந்தே சேரனிடம் பேசவில்லை என்பதனை வலியுறுத்தினார்.
கட்டுக்கதை சொல்லி கமல்ஹாசனை நம்ப வைத்த நடிகை ! கட்டுக்கதை சொல்லி கமல்ஹாசனை நம்ப வைத்த நடிகை ! Reviewed by EThanthi.in on November 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close