கட்சி தொடங்கப்போவது எப்போது? முதல் முறையாக பதிலளித்த ரஜினி !
இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி யுள்ளது.
இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினி நரந்திர மோடிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தி யாளர்களை சந்தித்த அவரிடம் பல கேள்விகள் கேட்கப் பட்டது. அதில் கட்சி எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப் பட்டது,
அதற்கு அவர் சட்டசபை தேர்தல் வர இன்னும் அதிக நேரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசிய போது, நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதி களிலும் நாம் போட்டி யிடுகிறோம். கட்சி தொடங்குவதற் கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டன.
இனி அம்பு விடுவது தான் பாக்கி என அறிவித் திருந்தார்.
தற்போது மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டி யிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் அதிக நேரம் இருக்கிறது என்று கூறியதால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



No comments