காதலித்த மனைவியை விவாகரத்து செய்த காரணம் - விஷ்ணு விஷால் பேட்டி !
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வல்லவராக இருப்பவர் விஷ்ணு விஷால். அதற்கு சான்றாக ராட்சசன் முண்டாசுப்பட்டி போன்ற திரைப் படங்களை சொல்லலாம்.
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர்.
சினிமாவில் இவருக்கு நல்ல காலம் அமைந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
சினிமாவில் இவருக்கு நல்ல காலம் அமைந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
2011 ஆம் ஆண்டு உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குனரின் மகளான ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதற்கான காரணத்தை தற்போது விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும், காதல் ஒன்றே என் வாழ்க்கையில் உண்மை யானதாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு நான் இவ்வளவு பேசும் ஆள் கிடையாது என்றும், மிகவும் அமைதியான ஆளாக இருப்பதால் நடிப்பில் முன்னேற்றம் அடைய முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதனால் சக நடிகர்கள் நடிகைகளுடன் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
திரைப்படங்களில் காதல் காட்சிகள் போன்ற வற்றில் இயல்பாக நடிப்பதற்காக நடிகைகளிடம் சகஜமாக பேசி பழகினேன்.
திரைப்படங்களில் காதல் காட்சிகள் போன்ற வற்றில் இயல்பாக நடிப்பதற்காக நடிகைகளிடம் சகஜமாக பேசி பழகினேன்.
ஆனால் இதுவே சந்தேகமாக மாறி என் திருமண வாழ்வில் விவாகரத்து வரை செல்லும் என்று நினைக்க வில்லை.
மேலும் தன்னுடைய மகன் மற்றும் மனைவியின் நலனுக்காக மட்டுமே விவாகரத்து பெற்றதாக வருத்தத்துடன் கூறி யிருக்கிறார்.
மேலும் தன்னுடைய மகன் மற்றும் மனைவியின் நலனுக்காக மட்டுமே விவாகரத்து பெற்றதாக வருத்தத்துடன் கூறி யிருக்கிறார்.
விஷ்ணு விஷால் ரஜினி தம்பதியினருக்கு ஆரியன் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
No comments