திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் - ரஜினி !
திருநங்கையாக நடிக்க தான் விருப்பப் படுவதாகவும், கிரிமினல்கள் பின்னால் ஓடவேண்டி யிருக்கும் என்பதால் தனக்கு போலீஸ் வேடமே பிடிக்காது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பாரை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி யுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இத்திரைப் படத்தில் நீண்ட இடைவெளி க்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.
சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் டிரெய்லர் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது.
பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் ரஜினி கலந்து கொண்டு, தர்பார் டிரெய்லரை வெளியிட்டார். விழாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், தனக்கு போலீஸ் வேடமேற்று நடிக்கவே பிடிக்காது என்றார்.
எல்லோரும் ஸ்டைல்., ஸ்டைல் என்கிறார்கள். என்னிடம் எதை அவர்கள் ஸ்டைல் என்கிறார்கள் எனத் தெரிய வில்லை என ரஜினி கூறினார்.
எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் எனக் கேட்டதற்கு திருநங்கையாக நடிக்க விருப்பம் எனக் கூறி கேள்வி கேட்டவரை ஆச்சரியப் படுத்தினார் ரஜினி.
ஆதித்யா அருணாச்சலம் சோகமான கேரக்டர் என்றும் மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என்றும் ரஜினி கூறினார்.
No comments