கம்பளியில் தங்க சிலை - கிறங்கடித்த ராதிகா ஆப்தே !
நியூயார்க்கில் நேற்று எம்மி விருது நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கரன் ஜோகர், குப்ரா சாய்த், அனுராக் காஷ்யப் என முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர்.
அதில் ராதிக ஆப்தேவும் கலந்து கொண்டிருந்தார்.
தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே.
ரஜினி உடன் காலா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றார். எம்மி விருதுக்காக அவர் நடித்த 'லஸ்ட் ஸ்டோரி' சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
அவர் தான் அந்த விருதை தட்டிச் செல்வார் என்று எதிர் பார்த்த நிலையில் அவருக்கு அந்த விருது கிடைக்க வில்லை.
இருப்பினும் விருதுக்காக வந்த ராதிகா சிவப்புக் கம்பளியை அலங்கரித்தக் காட்சி தங்கச் சிலை நின்றுக் கொண்டிருந்ததைப் போல் இருந்தது. மின்னும் உடையில் கேமராக்கள் பளிச்சிடும் போது கண் கூச வைக்கிறது.
ஷீர் வடிவமைப்பைக் கொண்ட அந்த கவுன் ரஃபில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஐரிஸ் வான் ஹெர்பென் நிறுவனத்தின் தனித்துவ ஆடை வடிவமைப்பாகும்.
அந்த டிசைனிற்கு சுமினாகாஷி (Suminagashi) என்று குறிப்பிடுகின்றனர். ஆடைக்கு பளீர் நிறத்தில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பொருத்தமான தேர்வு.
ஹைபன் சிம்பிள் மேக் அப் என பக்காவான ஆடை அலங்கரிப்பை செலிபிரிட்டி ஸ்டைலிஸ் பிரனாய் ஜெய்ட்லி செய்துள்ளார்.
மொத்தத்தில் அங்கிருந்த அனைவரையும் அழகால் கிறங்கடிக்க வைத்துள்ளார் ராதிகா ஆப்தே.
No comments