மீண்டும் வனிதாவால் கதறும் ஷெரின் ! Vanitha is back by Sherin
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ள வனிதா ஷெரினை கதற விட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா, சேரன், கஸ்தூரி, சாக்ஷி, அபிராமி ஆகியோர் வந்துள்ளனர். இது இன்று வெளியான முதல் புரமோவில் தெரியவந்தது.
வந்த கையோடு வனிதா ஹவுஸ் மேட்ஸுடன் சண்டை போட்டதும் வழக்கம் போல மீண்டும் சண்டைபோட தொடங்கி விட்டார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஷெரின் தான் காரணம் என்றார்.
இரண்டாவது புரமோ
இதனால் கோபப்பட்ட ஷெரினின் தோழியான சாக்ஷி, அவருக்காக பரிந்து பேசி வனிதாவிடம் சண்டை போட்டார். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகி யுள்ளது.
லவ் லெட்டர் எழுதுவியா?
அதில் ஷெரின் தர்ஷனுக்கு எழுதிய லவ் லெட்டர் மேட்டரை கையில் எடுத்துள்ளார் வனிதா. அப்போது பேசும் வனிதா, நான் கற்பனை உலகத்துல இருந்தேன்னு யாரும் சொல்லவே முடியாது.
நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? என சாண்டி, லாஸ்லியா, அபிராமி, சேரன் ஆகியோரின் முன்பு கேட்கிறார்.
ஈரை பேணாக்கி..
இதனை தொடர்ந்து, பாத்ரூமில் அழுது கொண்டிருக்கும் ஷெரினை சாக்ஷியும் கஸ்தூரியும் சமாதானப் படுத்துகிறார்.
அப்போது பேசும் கஸ்தூரி, ஈரை பேணாக்கி பேணை பெருமாளாக்கி விதவிதமா ஊதி பெரிசாக்குறது என்ன இந்த வீட்டுல புதுசா என வனிதா குறித்து கேட்கிறார் கஸ்தூரி.
எவிக்ட் பண்றாங்க
அவரை தொடர்ந்து வேறு ஒரு அறையில் பேசும் வனிதா, அன்னைக்கு நான் ஒரு விஷயம் பேசும்போது என் மேல மட்டும்தான் குற்றமாச்சு. ரெண்டாவது வாரம் அவன் வெளியே போயிருக் கான்னா தோராயமான கணிப்ப மட்டும் தான் நாம படிக்க முடியும்,
அதை வச்சு தான நம்மள எவிக்ட் பண்றாங்க என்கிறார்.
சூடு பறக்கும்
இதனை கேட்டு நான் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை என கதறி அழுகிறார் ஷெரின். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.
புரமோக்களை வைத்து பார்க்கும் போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பறக்கும் என தெரிகிறது.




No comments