கேப்மாரியால் விஜய் அப்பாவை நெருக்கும் பல பிரச்சனைகள் !
தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பி யுள்ளது.
சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் கேப்மாரி எனும் திரைப்படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ஜெய், அதுல்யா நடித்து இருந்தனர். இந்த படம் நெடுக இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும் அமைக்கப் பட்டிருந்தது.
இரண்டு கதாநாயகிகளும் போட்டி போட்டுக் கொண்டு சூடு பரக்க நடித்துள்ளனர்.
அதிலும் அதுல்யா( ஒத்த ரோசா பொண்ண ரொம்ப அழகா வளத்திருக்க மா! ) வேற லெவல்.
அதிலும் அதுல்யா( ஒத்த ரோசா பொண்ண ரொம்ப அழகா வளத்திருக்க மா! ) வேற லெவல்.
மேலும் இந்த படத்தில் கள்ளக் காதலை ஊக்குவிக்கும் விதமான கருத்து பலமாக இருந்தது. இதன் காரணமாகவே இந்த படத்தின் மீது எதிர்ப்புகள் வலுத்து உள்ளன.
சட்டம் ஒரு இருட்டறை, நாளைய தீர்ப்பு போன்ற புரட்சி படங்களை இயக்கிய சந்திரசேகர், இந்த மாதிரி கேவலமான திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்க வில்லை என்கிறார்கள்.
அவரே ஒரு பேட்டியில் தான் ஒரு சில படங்கள் மட்டும் தான் புரட்சிகரமாக இயக்கியதாக தெரிவித்துள்ளார். எனக்கே தெரியாமல் புரட்சி இயக்குனர் என்னும் பெயர் ஒட்டிக் கொண்டது என்றும் குறிப்பிட் டுள்ளார்.
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் ஒருவரான ஸ்ரீதர், எஸ்.ஏ. சந்திரசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாடெங்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், கள்ளக் காதலை ஊக்குவிக்கும் விதமாகவும்,
இளைஞர்களை தவறான செயல் களுக்கு தூண்டும் விதமாகவும் இந்த படத்தை இயக்கிய இயக்குனரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நெட்டிசன்கள் இந்த படத்தை வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கே டப் கொடுக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து – 2 படக் கதையை திருடி விட்டார் என சந்திரசேகர் மீது வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.
No comments