தனுஷுக்கு சிவகார்த்திகேயனுக்கும் இடையெ பற்றி எரியும் தீ மதன் !
ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பிரச்சனை பற்றிக் கொண்டுள்ள நிலையில், மீண்டும் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல
தனுஷால் சமீபத்தில் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளரு க்கு சிவகார்த்திகேயன் தானாகவே முன்வந்து படம் பண்ணி தருகிறேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பி யுள்ளதாம்.
அசுரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தனுஷுக்கு நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படம் வெளியானது.
இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார். அவர் ஏற்கனவே பல கடன் பிரச்சனையில் உள்ள நிலையில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வாங்கி வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் படம் செம ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்த தயாரிப்பாளரை நிற்க வைத்து குழியில் இறங்கியது. இதனால் ஏற்கனவே கடனில் இருக்கும் மதனுக்கு, இந்த படம் அவரை அதல பாதாளத்தில் தள்ளி விட்டது.
இதனால் வருத்தத்தில் இருந்த தயாரிப்பாளரிடம் சிவகார்த்திகேயன் தானாகவே முன் வந்து ஒரு படம் பண்ணித் தருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே வளர்த்த கடா மார்பில் முட்டி கொண்டிருக்கிறது.
அதிலேயே செம கடுப்பில் இருக்கும் தனுசுக்கு இந்த விவகாரம் தெரிந்ததும் எதிர் நீச்சல் படத்திற்கு பதிலாக எதிரி நீச்சல் என பண்ணி இருக்க வேண்டுமென செம காண்டில் உள்ளாராம் தனுஷ்.
மேலும் இந்த சூடான விஷயம் தனுஷ் தரப்பை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கி யுள்ளது.
ஏற்கனவே எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் காக்கி சட்டை போன்ற படங்களை தயாரித்தார் என்பது குறிப்பிட த்தக்கது.
இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் காக்கி சட்டை திரைப்படம் செம அடி வாங்கியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரை பார்த்து கண்ணழகு ரத்தினமே என பாடினாலும் ஆச்சர்யப் படுவதற் கில்லை.
இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு, இரண்டு பேர் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வேண்டும் என்கிறது கோடம்பாக்கம்.
No comments