கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரம்மாண்ட மாலை - விஜய் ரசிகர்கள் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய், பிகில் திரைப்படத்திற்கு பிறகு உலகமெங்கும் குறிப்பாக இந்தியாவில் மிகப் பெரிய ஸ்டாராக உருவெடுத் துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் சுமார் 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் சுத்தமாக மார்க்கெட்டை இழந்த விஜய்க்கு இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
கேரளாவில் எப்பவும் போல் வசூல் வேட்டை ஆடியது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிகபட்ச வசூலை பிகில் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தி லும் இதுவரை எந்த படமும் செய்யாத அளவுக்கு 80 கோடி வரை வினியோகஸ்தர் களுக்கு ஷேர் கிடைத்துள்ளது.
பிகில் திரைப்படம் வட இந்தியாவின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பட்டையை கிளப்பியது.
இதனால் விஜய்யின் அடுத்த படத்தை பேன் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய சொல்லி பலதரப்பட்ட தயாரிப்பாளர் களிடம் இருந்து கோரிக்கை வருகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் தனது தளபதி 64 திரைப்படத்திற் காக கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் உள்ளார்.
இங்கு அவரை பார்க்க தினமும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் ஹோட்டலின் முன்பு கூடி வருகின்றனர்.
இங்கு அவரை பார்க்க தினமும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் ஹோட்டலின் முன்பு கூடி வருகின்றனர்.
தமிழக ரசிகர்களை மிஞ்சும் வகையில் கர்நாடகா விஜய் ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய மாலை ஒன்றை தயார் செய்துள்ளனர்.
அதை கையில் தூக்கி வர முடியாமல் கிரேன் வைத்து தூக்கி வந்தனர். ரசிகர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்கி அந்த மாலையை அணிவித்துக் கொண்டார் தளபதி விஜய்.
கர்நாடகாவில் இவருக்கு உருவாகி யிருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்த்து தமிழ் சினிமா உலகமே மிரண்டு போயுள்ளது குறிப்பிடத் தக்கது.
No comments