EThanthi - சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி?

Flash News

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி?

சமூகத்தின் மீது, தீவிர பற்றுதல் உடையவர் களாக காட்டிக் கொள்வதில், அரசியல் தலைவர் களை விட, கூடுதல் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் சினிமாக் காரர்கள்.
சமூகம் சார்ந்த பிரச்னை களை, முதல் ஆளாக கையில் எடுக்கிறார்கள் தற்போதைய சினிமாக் காரர்கள். 

இது போன்ற பிரச்னை களுக்கு கை கொடுப்பவராக தன்னை காட்டிக் கொள்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. 

பல்வேறு பிரச்னை களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் துவங்கி இருக்கிறார்.

இதனால், அவரைத் தேடிச் சென்று பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் புகழ்கின்றனர். 

அவர் அளிக்கும் அன்பளிப்பையும் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

அவரை சந்திப்பவர்களில் சில, அரசுக்கு எதிராக செயல்படும் குழுக்களும் இருப்பதாக, உளவுத் துறை போலீசார் கண்டறிந் துள்ளனர். 

இதை யடுத்து, நடிகர் விஜய் சேதுபதியின் மொத்த அசைவு களையும் கண்காணிக்கத் துவங்கி உள்ளனர்.

விஜய் சேதுபதி பதில்

பத்திரிகை யாளர்கள் சிலர், விஜய் சேதுபதியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன் நான். அதனால், அவ்வப்போது சமூகத்துக்கு எதிராக நடக்கும் பிரச்னைகள் குறித்து, கருத்துக் களைச் சொல்கிறேன். 

என் கருத்துக்களின் பால் ஈர்க்கப் பட்டவர்கள், பல குழுக்களைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும், என்னுடைய கருத்துக் களுக்காக நன்றி சொல்கிறார்கள்.

மக்கள் பிரச்னை களுக்காக போராடும் அவர்களுக்கு, என்னால் முடிந்த பண உதவிகளை செய்கிறேன்.

மற்றபடி, அவர்கள், சார்ந்துள்ள குழு எப்படிப்பட்டது? தீவிரவாத த்தின் மீது நம்பிக்கை உடையவர்களா?

என்பது குறித்தெல்லாம் எனக்குத் தெரியாது. அது தேவையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருக் கிறார்.

இருந்த போதும், நடிகர் விஜய் சேதுபதி நடவடிக்கை களை போலீசார் கண்காணிக் கின்றனர்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி? சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி? Reviewed by EThanthi.in on July 31, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close