EThanthi - படகில் 4 வயது மகனை தனியாக விட்டு விட்டு திடீரென மாயமான நடிகை ! நடந்தது என்ன?

Flash News

படகில் 4 வயது மகனை தனியாக விட்டு விட்டு திடீரென மாயமான நடிகை ! நடந்தது என்ன?

ஹாலிவுட் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நியா ரிவேரா. இவர் ஃப்ரான்கன்ஹூட், க்ளீ, மேட் ஃபேமிலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
படகில் 4 வயது மகனை தனியாக விட்டு விட்டு திடீரென மாயமான நடிகை
இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலிபோர்னியா பகுதியில் உள்ள பிரு ஏரிக்கு படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது 4 வயது மகன் ஜோஸியுடன் படகு சவாரி செய்துள்ளார்.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு பிறகு அந்தப்படகில் 4 வயது குழந்தை மட்டுமே தூங்கியவாறு இருந்துள்ளது. 
இதனை மற்றொரு படகில் வந்த சிலர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குழந்தையின் அருகே படகில் பெரியவர்களுக்கான லைஃப் ஜாக்கெட் ஒன்று இருந்துள்ளது. 

மேலும் செல்ஃபோனும் கிடந்துள்ளது. பின்னர் இது குறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவலளித்துள்ளனர். 

இந்த நிலையில் படகு சவாரியின் போது நடிகை நியா தவறி ஏரியின் உள்ளே விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் இரவு முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 
திடீரென மாயமான நடிகை
மேலும் விசாரணையில் தன் தாய் நியா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். மேலும் நியாவின் கார் பிரு ஏரியின் கார் நிறுத்தத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் போலீசார்கள் இருநாட்களாக தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஆனாலும் நியா கிடைக்காத நிலையில் அவர் காணாமல் போய் விட்டார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பிரு ஏரியில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
படகில் 4 வயது மகனை தனியாக விட்டு விட்டு திடீரென மாயமான நடிகை ! நடந்தது என்ன? படகில் 4 வயது மகனை தனியாக விட்டு விட்டு திடீரென மாயமான நடிகை ! நடந்தது என்ன? Reviewed by EThanthi.in on July 13, 2020 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close