EThanthi - ஜாமியாவின் முன்னாள் மாணவர்களான கான்கள் மெளனம் காப்பது ஏன்?

Flash News

ஜாமியாவின் முன்னாள் மாணவர்களான கான்கள் மெளனம் காப்பது ஏன்?

ஜாமியா பல்கலைக்கழகத் தாக்குதல் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் களான ‘கான்’கள் இன்னும் மெளனம் காப்பது ஏன் என அப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பலர் சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜாமியாவின் முன்னாள் மாணவர்களான கான்கள் மெளனம் காப்பது ஏன்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களாக அறியப்படும் ஷாருக்கான், ஆமிர்கான் ஆகியோர் டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆவர். 

டெல்லியில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்தியத் தாக்குதலில் பெருமளவு பாதிக்கப் பட்டவர்களாக ஜாமியா மாணவர்கள் உள்ளனர்.

நாடு முழுவதும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸாருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஆனால், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இது குறித்து ஒரு வரி கூட பேசாது சக பாலிவுட் உலகத்தாரையே எரிச்சல் ஊட்டியுள்ளது.

டாப் நட்சத்திரங்களை இதர பாலிவுட் நடிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜாமியா பல்கலைக் கழகத்திலிருந்து படித்து உயர் பதவிகளில் இருப்போர் ஷாருக்கான் மற்றும் ஆமிர்கானுக்கு எதிராக விமர்சித்து வருகின்றனர். 

#shameonBollywood என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருவதும் குறிப்பிடத் தக்கது.
ஜாமியாவின் முன்னாள் மாணவர்களான கான்கள் மெளனம் காப்பது ஏன்? ஜாமியாவின் முன்னாள் மாணவர்களான கான்கள் மெளனம் காப்பது ஏன்? Reviewed by EThanthi.in on December 17, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close