உங்கள் பெண் குழந்தைக்காக மரம் நடுங்கள் – நமீதா !
நடிகை சந்தோஷி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நமீதா, பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் என்று கூறி யிருக்கிறார்.
தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.
தமிழ் மட்டு மல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டு மல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
பேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து கடையை சென்னையில் தொடங்கினார்.
இது மணமகளுக் கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோ கிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.
தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளி லிருந்தும் கூட பலரும் சந்தோஷி யிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தி யுள்ளார் சந்தோஷி.
இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னத்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா,
பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளரு மான பரினா,
உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடிகை நமீதா பேசும் போது, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்று களை நட்டு வைத்து வளர்க்கிறார்கள்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இது போன்று முயற்சி. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல.
மொத்த கிராமத்தின் பொருளாதார த்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட.
அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்.
அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்.
பெண்கள் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. பெண்கள் வாழப் பிறந்தவர்கள். வீராங்கனைகள். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
என்னைப் பொருத்த வரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதி யானவர்கள்.
வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப் படுவார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக் கிறேன். ஆனால் அப்போ தெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மை யிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.





No comments