யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது ஏ.ஆர். முருகதாஸ் !
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது.
அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள்,
படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று
குறிப்பிட் டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின்
ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்ப தாகவும் பெரும் சர்ச்சை உருவானது.
இதனால் அதிமுக வினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் அதிமுக வினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
இதை யடுத்து, சில திரையரங்கு களில் சில காட்சிகள் ரத்து செய்யப் பட்டன.
சென்னை விருகம் பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் படம் வெளியான இரு நாள்கள் கழித்து காவலர்கள் குவிக்கப் பட்டார்கள்.
அன்றைய நாளின் நள்ளிரவு க்குப் பிறகு அவர் கைது செய்யப் படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், அவரது பாதுகாப்புக் காகவே காவலர்கள் அவரது வீட்டில் குவிக்கப் பட்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை யடுத்து, சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை
நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அரசின் நலத்திட்டங்களை சர்கார் படத்தில் விமரிசித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், அரசையோ அரசின் நலத்திட்டங் களையோ விமரிசிக்க மாட்டேன் என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் வலியுறுத்தப் பட்டது.
அரசின் கோரிக்கை குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்க மளிக்க உத்தர விட்டு, முன்ஜாமீன் வழக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
ஏ.ஆ.ர் முருகதாஸ் தனது விளக்கத்தை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்த தாவது:
இலவசத் திட்டங்களை விமரிசித்தது தொடர்பாக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது. மன்னிப்பு கேட்பது எனது கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரானது.
படத்தில் காட்சிகள் அமைப்பது என் சுதந்தரம். இனிவரும் படங்களில் விமரிசிக்க
மாட்டேன் என்றும் உத்தரவாதம் அளிக்கமுடியாது என்று கூறி யுள்ளார்.
முருகதாஸு க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பு வலி யுறுத்தியது.
இதை யடுத்து முருகதாஸைக் கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.




No comments