அப்பாவின் இறுதி யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை - ராதிகா !
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள முடியாததை வேதனை கலந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, அஜித், தனுஷ், சிவக்கார்த்திகேயன்,
பிரபு, விக்ரம் பிரபு, பிரசன்னா, நடிகைகள் சினேகா, சரோஜா தேவி, குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி யுள்ளனர்.
கருணாநிதியின் மறைவு செய்தி அறிந்ததுமே ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராதிகா சரத்குமாரால்
அவரின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் மகன் ராஹலுடன் பள்ளியில் சேர்க்க சிங்கப்பூர் வந்ததால் அப்பாவின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளமுடியாததை வேதனை கலந்த சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் #KalaignarNoMore— Radikaa Sarathkumar (@realradikaa) August 8, 2018



No comments